கணக்கில்லா கன்னிகையரின் ஒரே கணவன்…!

Originally posted 2017-03-26 15:27:41.

இதோ, இந்தியன் எக்ஸ் பிரஸ் எழுதுகிறது

இதோ, இந்தியன் எக்ஸ் பிரஸ் எழுதுகிறது

ண்மைக்காலங்களாக, இந்து சகோதரர்களில் சிலர், இஸ்லாம் கூறும் பலதார மணத்தை விமர்சிப்பது மட்டுமின்றி, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் பத்து திருமணங்கள் வரை செய்துகொண்டதையும் குறித்து அவதூறு கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் கடவுளாக வணங்கும் கிருஷ்ணண் என்பாருக்கு எத்துனை மனைவிகள் என அவர்கள் அறிந்தால் என்ன செய்வார்கள்..?

இந்தக் கடவுளுக்கு உள்ள தனித் தன்மைகள் இருக்கின்றனவே – அவை மிக மிக அசாதாரண மானவை!

சின்ன வயதில் வெண் ணெயைத் திருடித் தின்ற வனாம்;  வாலிப வயதில் பெண்ணைத் திருடிய வனாம் (கடவுள் என்றால் இப்படி யல்லவா இருக்க வேண்டும்!)

திருட்டைக் கடவுள்மூலம் தேசிய மயமாக்கியவர்கள் இந்த இந்துத்துவ வாதிகள் தான் – _ எக்ஸ்பிரஸ் பத் திரிகை வகையறாக்கள்தாம்.

இந்தக் கிருஷ்ணன் அவதாரத்தில் திருக்கல்யாணக் குணமே கோபிகைகளோடு கொஞ்சுவது தான்! ஒரு பெண் இரு பெண் அல்ல. அறுபதனா யிரம் கோபிகைகளோடு கொஞ்சக் கூடிய காமக் கே()டியாம்.

ஒரு படம் இதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் மாட்டப்பட்டு இருக்கும். இப்பொழுது அந்தப் படத்தை அதிகம் காண முடியவில்லை (தந்தை பெரியார் பிரச்சாரத்தின் காரணமாக வெட்கப்பட்டுக் கழற்றி எறிந்திருக்கலாம்).

பெண்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருப்பார்கள்; கடவுள் கிருஷ் ணன் இருக்கிறானே – அவன் என்ன செய்வான் தெரியுமா?

கரையில் துணிகளைக் கழற்றி வைத்து விட்டுப் பெண்கள் குளிக்கப் போனார்கள் அல்லவா! அந்தத் துணிகளைத் திருடிக் கொண்டு போய் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு குளிக்கும் பெண்களை ரசித்துக் கொண்டிருப்பான் அந்தக் கிருஷ்ணன் என்னும் கடவுள்.

பெண்கள் கெஞ்சிக் கூத்தாடி துணிகளைக் கேட்டபோது, கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும் பிட்டுக் கேட்க வேண்டும் என்றவன் தான் இந்துக்களின் முக்கிய கடவுள்.

இந்தக் காட்சியைப் படமாக்கி வீட் டுக்கு வீடு மாட்டி வைத்திருந்தார்களே.

ஆபாசத்தைப் பக்தி என்று அள்ளிப் பருகிய இந்தக் கேவலத்தை என்ன சொல்ல!

இதோ, இந்தியன் எக்ஸ் பிரஸ் எழுதுகிறது; -படிக்கவும்.

இந்த நாட்டு மக்கள் கிருஷ் ணனின் வரலாறு என்ற நிலைப்பாடுபற்றி ஒரு நாளும் அய்யங் கொண்டதில்லை. காலனி படையெடுப்பாளர்கள் கிருஷ்ணனை ஒரு இதிகாச கதாநாயகன் ஆகக் காட்டிப் பல கட்டுக் கதைகள் புனையும் வரை.

நம் நாட்டில் சில புகழ் பெற்ற, ராமன், கிருஷ்ணன், புத்தர், மகாவீரர், சங்கரர் போன்ற எல்லோருக்கும் தெரிந்த, புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ள நிகழ்ச்சிகளின், பாத்திரங் களின், அவர்களைச் சுற்றி நடந்துள்ள நூற்றுக்கணக்கான,  கோடிக்கணக்கான வருடங்களுக்கு முந்திய கால கட்டத்தை நிர்ணயிப்பதற்கு தொல். துறை வானவியல் துறைகள், பெரும் இதிகாசத் தலைவர்களின் வாழ்வு பற்றி அறிய பல புதிய எல்லைகளைக் கடந்து வந்துள்ளன.

புராணங்களின்படி  கடவுள் கிருஷ்ணன் நள்ளிரவில் பிறந்தவர். அந்த இரவு, சந்திரனின் எட்டாம் இடத்தில் உள்ள அஷ்டமித்திதி சந்திரன் ரிஷப (எருது) அருகில் உள்ளது. பிறந்த நட்சத்திரம் ரோகிணி; மாதம், சரவண.

இந்த விவரங்கள், கிருஷ்ணனின் வாழ் நாட்களில் இருந்த வான்வெளி நிலைகளைப் பற்றி, மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளைக் கொண்டு நாம் கிருஷ்ணனின் பிறந்த நாளை அறிகிறோம். அந்த முயற்சியின் விளைவாக, ஆங்கிலக் காலண்டர் படி கிறிஸ்துவின் பிறப்புக்கு முன் 3112 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 27ஆம் தேதி என்று கணிக்கப்படுகிறது.

இந்திய வழக்கப்படி கிருஷ்ணனின் பிறப்பு ஸ்ரீஜெயந்தி என்றும் அழைக் கப்படுகிறது. இந்திய வானவியலில் ஜெயந்தி என்ற சொல்லிற்கு சுவை யான ஒரு காரணம் இருக்கிறது. சில விண்மீன்களுக்கு ஏற்படும் சந்திர இடைவெளிகளுக்கு இந்திய வானவிய லாளர்கள் சிறப்புப் பெயர்களைக் கொடுத்து உள்ளனர். மிதுன கோள் கட்டமைப்பில் புனர்வசு நட்சத்திரத்தின் சந்திர நிலை ஏற்படும்போது ஜெயா என்று அழைக்கப்படுகிறது.

மிதுன கட்டமைப்பில் புஷ்ய நட்சத்திரத்தில் சந்திர நிலை ஏற்படும் போது, அதற்கு நசினி என்று பெயர். விருச்சிக கட்டமைப்பில் சரவண நட்சத்திரத்தில் சந்திரன் ஏற்படுவதற்கு விஜயர் என்று பெயர். அதேபோல ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் நிலை ஏற்படும்போது அதற்கு ஜெயந்தி என்று பெயர்.

சந்திரன் ரோகிணி நடசத்திரத்தில் இருந்தபோது நிகழ்ந்த கிருஷ்ணன் பிறப்பு ஜெயந்தி என்று அழைக்கப் படுகிறது. கிருஷ்ணனிடம் தொடர்பு இருந்த காரணத்தால், ஜெயந்தி மிகவும் பிரபலமடைந்தது.

பல நூற்றாண்டுகாலமாக, ஆண்டு தோறும், இந்தியர்கள் கிருஷ்ணனின் பிறந்த தினத்தை சரவண மாதத்தில், ரோகிணி நட்சத்திரத்தில், கிருஷ்ண பட்ச அஷ்டமியில், (தேய்பிறைச் சந்தி ரனின் 8ஆம் இடம்), புராணங்களின் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இருந்தாலும் பொது அறிவிற்கு, பிறந்த ஆண்டு என்னவென்று தெரிய வில்லை.

தொல்லியல் வானவியல் தவிர, பல வழிகளிலும் கிடைக்கப் பெறுகிற புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கிருஷ்ணன் கிறிஸ்து பிறப் பதற்கு முன், 3112 ஆண்டுகளுக்கு முன் பிறந்துள்ளான். ஆகவே 2013ஆவது ஆண்டு, கிருஷ்ணனின் பிறப்பிலிருந்து 5125 ஆண்டுகளாகிறது.

கடவுள் கிருஷ்ணனின் 5125ஆவது பிறந்த நாளை, இந்தியாவின் மிகவும் நேசிக்கப்பட்ட கடவுள், உண்மை யிலேயே ஒரு வரலாற்று நாயகன் என்றும் 5000 ஆண்டுகளுக்கு முன் பேயே நமது கோளுக்கு வந்துள்ளார் என்று அறிந்து கொண்டாடுவோமாக.

எக்ஸ்பிரஸில் இப்படி எழுதியவர்கள் D.K. ஹரி, D.K. ஹேமா ஹரி, பாரத் ஞானம் நிறுவனர்கள்.

இந்தக் கிருஷ்ணன் என்ற கடவுள் கற்பிக்கப்பட்டதே கவுதம புத்தருக்குப் பிறகுதான்.

இந்தக் கிருஷ்ணன் என்ற கடவுள் கற்பிக்கப்பட்டதே கவுதம புத்தருக்குப் பிறகுதான்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் இந்தக் கட்டு ரையை எழுதியவர் கூறும் வானியல் விஞ்ஞானம் எந்தத் தரத்தைச் சார்ந்தது என்பதைச் சம்பந்தப்பட்ட வானியல் அறிவியலாளர்கள் தான் சொல்ல வேண்டும்.

சூரியன் என்ற நட்சத் திரத்தை கோள் என்னும் பட்டியலில் அடைத்து வைத்துள்ள இந்தப் புராண அறிஞர்கள் எந்த எல்லைக்கும் சென்று எந்த அளவுக்கும் புளுகக் கூடியவர்கள்தாம்.

இந்த அற்புதங்களை எல்லாம் பயன்படுத்தி ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ஏட்டை அச்சிட்டுக் காட்டச் சொல் லுங்கள் பார்க்கலாம். (அறிவைக் கெடுப்பவர் களுக்குத் தூக்குத் தண் டனை கொடுக்க வேண் டும் என்று தந்தை பெரி யார் கூறியது எவ்வளவுத் துல்லியமானது என்பதை அறிந்து கொள்க!)

இந்தக் கிருஷ்ணன் என்ற கடவுள் கற்பிக்கப்பட்டதே கவுதம புத்தருக்குப் பிறகுதான்.

யாகக் கலாச்சாரத்தை எதிர்த் தவர் கவுதம புத்தர்; ஒழுக் கத்தைப் போதித்தவர் அந்த உத்தமபுத்திரன். மன்னர் குலத்தில் தோன்றிய அந்த மதி வாணரின் பிரச்சாரத்தால் பார்ப்பன ஆதிக்கம் குடை சாய்ந்து விழுந்தது. வருணா சிரமம் விழுந்து  விட்டது! உயிர்ப் பலி யாகங்கள் மக் களால் வெறுத்தொதுக்கப்பட் டன. கவுதம புத்தரின் கருணை வெள்ளத்தில் மக்கள் நீந்தி மகிழ்ந்தனர். ஆரியக் கலாச் சாரம் ஆயிரம் அடிக்கும் கீழே புதைக்கப்பட்டது.

இந்த ஒழுக்கச் சமூக அமைப்பைச் சீர்குலைக்க காமத்தை முன்னிறுத்திக் கற்பிக் கப்பட்டவன் இந்தக் கிருஷ்ணன் என்னும் கற்பனைப் பாத்திரம்.

வண்டி வண்டியாக கதை களைக் கிளப்பி விட்டார்கள். இன்றைக்கும் சினிமா கலாச் சாரம் கிளம்பி இளைஞர்களைத் தம் வலைக்குள் இழுத்து மூடிக் கொள்ளவில்லையா? இந்த யுக்திதான் அன்று கிருஷ்ண அவதாரமாக ஆக்கப்பட்டது.

இந்தக் கிருஷ்ணன் தான் கீதையை  அருளியவனாம்! கொலையைத் தருமமாக உப தேசித்தவன். தன் சுற்றத்தாரைக் கொலை செய்வதற்கு அர்ச் சுனன் தயங்கியபோது கொல்லு; கொலை செய்யத் தயங்காதே! நீ அழிப்பது உடலைத் தான் _ ஆத்மா வையல்ல என்று கொலையை ஒரு கருத்தாக்கமாக உபதேசித்த உபத் திரக்காரன் தான் இந்தக் கிருஷ்ணன்.

இந்தக் கீதா உபதேசம்தான் இந்தியாவில் ஆன்மா என்று அடே யப்பா எப்படியெல்லாம் பிரச்சாரப் புழுதியைக் கிளப்பி விட்டார்கள்.

புத்தர் கொள்கையை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை

புத்தர்பிரான் அறமொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறர் மனைவியை விரும்பாதே என்பது; இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணாவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக்கட்டிப் பரப்பப்பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே கிருஷ்ண லீலா கதையின் நோக்கம்.

புத்தர் கொள்கைகளின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது.

_ (என்சைக்ளோபீடியாபிரிட்டானிகா)

 

Related Post