இந்துத்துவம்- பெண்கள்!

Originally posted 2017-04-20 22:38:28.

இந்துத்துவம் குறித்த விஷயங்கள் மகளிர் நிலை குறித்த அம்சங்களில் ஒரு அடக்குமுறையை முன்வைத்துதான் பேசுகின்றன.

இந்துத்துவம் குறித்த விஷயங்கள் மகளிர் நிலை குறித்த அம்சங்களில் ஒரு அடக்குமுறையை முன்வைத்துதான் பேசுகின்றன.

ந்துத்துவம் குறித்த விஷயங்கள் மகளிர் நிலை குறித்த அம்சங்களில் ஒரு அடக்குமுறையை முன்வைத்துதான் பேசுகின்றன. கீதையின் அர்ச்சுன உபதேசக் குருத்துக்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல.குறிப்பாக, தாழ்த்தப்ட்ட சாதிப் பெண்கள் இந்நிலையில் பெரும் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து அலசுகின்றது கட்டுரை!

இந்துத்துவ சக்திகள் எப்படி பெண்களையும் , தலித்களையும் நசுக்க முற்படுகின்றன என்பது பற்றிய மார்க்ஸின் பார்வைகள் – பூச்சாண்டிகள் என்பது சரியான வார்த்தையாய் இருக்கும் – இந்த அத்தியாயத்தில். எப்படி இந்துத்துவ சக்திகள் மனுதர்மத்தைத் திரும்பக் கொண்டுவரப் போகின்றன என்பது பற்றியும், அது எப்படி தலித்களுக்கும் பெண்களுக்கும் எதிரி என்பதை மிக விரிவாகச் சொல்கிறார். ஆனால் அதே சமயம் ‘பா ஜ க போன்ற தேர்தல் களத்தில் செயல்படக் கூடிய கட்சிகள் எல்லாச் சமயங்களிலும் மனுவை நிலைநாட்டுவது தான் தங்களின் நோக்கம் என்று சொல்லிவிடமுடியாது. எனவே இத்தகைய சந்தர்ப்பங்களில் தார்மிக வாழ்வு , ஸ்வதர்மம், தருமம், படிநிலையாய் ஒழுங்கமைக்கப்பட்ட ‘சன்ஸார ‘ ஆகியவற்றை விதந்தோதுவதைக் காணலாம். ‘ என்றும் சொல்கிறார். அதாவது மனுதர்மத்தினை இந்தியாவில் நிலைநாட்டுவது தான் பா ஜ க-வின் மறைமுக நோக்கம் என்று குற்றம் சாட்டுகிறார்.

ஆண் பெண் வேறுபாடு பற்றி , இந்துத்துவ அமைப்புகள் சொல்வதாய் மார்க்ஸ் கூறும் விஷயங்களும் கூட எல்லா மதங்களின் கீழும் உள்ளவை தான். கத்தோலிக்கர்கள் இன்னமும், அதிகார மேல்நிலையில் உள்ள பாதிரியார்கள் பதவிக்கு பெண்கள் வருவதை அங்கீகரிக்கவில்லை. முஸ்லீம் பெண்களுக்கு ஆண்களுடன் சேர்ந்து தொழும் உரிமையும் இல்லை. இவற்றைப் பார்க்கில் கடந்த 100 வருடங்களில் இந்து சமூகம் பாரதூரமான மாற்றங்களைப் பெண்களைப் பொறுத்தவரையில் நடைமுறைப் படுத்தி வருகிறது. பங்காரு அடிகளின் இயக்கத்தில் பெண்கள் முன்னணியில் இருப்பதையும் இங்கு சுட்டிக் காட்டலாம். விடுதலைப் போராட்டத்தில் இந்துப் பெண்கள் பங்கும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய ஒன்று. ஆனால் மார்க்ஸின் குருட்டுப் பார்வையில் இதெல்லாம் படுவதே இல்லை.

‘நைரோபியில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெண்களது வீட்டு வேலைக்கு ஊதியம் தரவேண்டும் என்ற கோரிக்கையும், லெஸ்பியனிசத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ‘ இந்துத்துவ சக்திகள் தீவிரமாய் எதிர்த்ததாய்ச் சொல்கிறார் மார்க்ஸ். அவர் சொல்லாமல் விடுவது, நைரோபியிலும் சரி , சீனாவிலும் சரி பெண் உரிமைகளுக்கு எதிராக அமைப்பு ரீதியாய் மிகமிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது கத்தோலிக்கத் திருச்சபையும், இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளூம் தான்.

‘இப்போது தலித் பிரசினைக்கு வருவோம் ‘ என்கிறார் மார்க்ஸ். தலித் பிரசினையை இந்து எதிர்ப்புப் பிரசினையாய் ஆக்குவதற்கான முயற்சிகள் அம்பேத்கர் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விமர்சனம் இந்து சமூகத்தில் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. அதிகாரப் பீடங்களில் தலித்கள் இடம் பெறுவது கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து வருகிறது. முழுமையான அங்கீகாரம் இன்னமும் கிட்டவில்லை என்றாலும், 100 வருடங்களில் இந்து சமூகம் அடைந்திருக்கும் மாறுதல், நிச்சயமாய் இந்தியாவிற்கும், இந்து சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பது தான்.

அம்பேத்கரின் விமர்சனத்தை மையப் படுத்தி, இந்து மதத்தை விமர்சிக்கப் பயன் படுத்திக் கொள்ளும் மார்க்ஸ் போன்றவர்கள் இஸ்லாம் பற்றி அறிவுபூர்வமாய் அம்பேத்கர் சொன்ன விமர்சனங்களைப் பூசி மெழுகுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

‘தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக் குறியீடாய் விளங்கும் அம்பேத்கர் , பூலே போன்றோரை இந்துத்துவச் சொல்லாடலுக்குள் அடக்க முனைதல் ‘ என்பது ஒரு குற்றச் சாட்டய் மார்க்ஸ் முன்வைக்கிறார். அம்பேத்கரை இந்துவாய்ச் சித்தரிப்பதில் உள்ள முரண்பாட்டைப் புரிந்துகொள்ளலாம், ஆனால் பூலே தன்னை இந்துவாய் இனம் கண்டவர் தான். அம்பேத்கர் போன்று மதமாற்றம் பற்றிப் பேசியவர் அல்ல பூலே.

முஸ்லிம்களுக்கும் தலித்களுக்குமான ஒற்றுமை இயல்பானது என்பதற்கு மார்க்ஸ் சொல்லும் ஒரு காரணம் : ‘கிராமப் புறங்களில் தலித்களுக்குத் தேவையான மாட்டுக் கறியை இஸ்லாமியக் கசாப்புக் கடைக் காரர்களே தொடர்ந்து அளித்து வருகின்றனர். ‘ இது பற்றி என்ன சர்வே எடுத்தார் என்று தெரியவில்லை. பன்றிக்கறியை உண்கிறார்கள் என்று தலித்கள் மீது வெறுப்பை உமிழும் இஸ்லாமியர்களும் உண்டு. இது போன்ற பொறுப்பற்ற பொதுமைப் படுத்தல்கள், ஒற்றுமையை வளர்க்க உதவாது.

இந்த அத்தியாயத்தில் கடைசியில் அவர் தரும் ஒரு கருத்து இது: ‘இந்துத்துவத்தின் ஆதாரமாக விளங்கும் பார்ப்பனியத்தை ‘ஒதுக்குதலும் ஒதுங்குதலும் ‘ என வரையறுத்ததால், அதற்கெதிரான செயல்பாடு ஐக்கியமாதலும் அத்து மீறலுமாகவே இருக்க முடியும். தலித்கள் முதலில் தங்களுக்குள்ளும் பிறகு சிறுபான்மையினருடனும் பிறகு இதர ஒடுக்கப்பட்ட சக்திகளுடனும் இந்துத்துவத்திற்கு எதிராக ஐக்கியமாதல் , இந்து தரும அடிப்படையில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வெளிகளிலிருந்து அத்து மீறுதல் (எ கா: சுடுகாடு, கோயில் கருவறை) என்பதாக இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும். மதத்தாலும் ஆணாதிக்கத்தாலும் , சாதீயத்தாலும் கறைபட்டுப் போன நமது மொழி, பாரம்பரியம் , கலாச்சாரம் என எல்லாவற்றிலும் இந்த அத்துமீறல்கள் மேற்கொள்ளப் பட வேண்டும். ஒழுக்கம், சுத்தம், தீட்டு, அழகு போன்ற கறைபட்டுப் போன கருத்தாக்கங்கள் கவிழ்க்கப்பட வேண்டும். அரசியல் , பொருளாதாரம், கலாச்சாரம், கருத்தியல் எனப்பல தளங்களில் மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி என்ற கருத்தாக்கங்களுக்காக நடைபெறும் போராட்டங்களில் தங்களுக்கான அர்த்தங்களை நிலை நாட்டுவதில் தலித்கள்+பெண்கள்+சிறுபான்மையினர் முன்னணியில் நிற்கவேண்டும். இதர ஒடுக்கப்பட்ட மற்றும் சனநாயக சக்திகள் அவர்களோடு இணைந்து நிற்கவேண்டும். ‘

Pompous hyperbole – மிகப் பெரிதான ஒரு ஊதிப் போன சுய முக்கியத்துவத்தில் எழும் இந்த அறிவுரை , சமகால நிதர்சனங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஒரு வெற்று வாசகம். பார்ப்பனீயம் இந்து மதத்தின் ஆதாரம் என்ற ஒரு பொய். அதைத் தொடர்ந்து, தீட்டு, ஒழுக்கம் என்ற கருத்தாக்கங்கள் கவிழ்க்கப் படுமானால், இஸ்லாமியர்கள் இந்தக் கவிழ்த்தலுக்கு தலித்களுடன் துணை நிற்பார்களா ? ‘மதத்தாலும் ,சாதீயத்தாலும் கறைபட்டுப் போன நம் மொழி ‘ என்பதற்கு ஏதாவது பொருள் இருக்கிறதா ? எல்லா மொழிகளும் இப்படிப் பார்க்கப் போனால் , இனவாதத்தினாலும், ‘மற்றவர் ‘ மீதுள்ள வெறுப்பினாலும் கறைபட்டவையே. இந்தக் கறையல்ல ஒரு மொழியின் அடையாளம். ஒரு மொழியின் ஒரு மூலையில் கிடக்கும் கறையினால் மொழி முழுதுமே கறைபட்டதாய்ச் சொல்ல முடியுமா ? ‘சாதி இரண்டொழியெ வேறில்லை ‘ என்பதும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ கூடத் தமிழ் தான்.

இந்துத்துவம் குறித்த விஷயங்கள் மகளிர் நிலை குறித்த அம்சங்களில் ஒரு அடக்குமுறையை முன்வைத்துதான் பேசுகின்றன.

இந்துத்துவம் குறித்த விஷயங்கள் மகளிர் நிலை குறித்த அம்சங்களில் ஒரு அடக்குமுறையை முன்வைத்துதான் பேசுகின்றன.

 

இந்தக் கறையைப் போக்குவது என்பது, படைப்பு மற்றும் மொழி ஆக்கத்தினால் ஆகும் , சமூக இயக்கங்களினால் தான் ஆகும். அது இணைப்பிற்கான போராட்டம், தனிப்பிற்கான போராட்டம் அல்ல. ‘தன்னை தலித்தாக உணர்வது ‘ என்பதும் கேட்கக் கவித்துவமாய் இருக்கலாம். ஆனால் நடைமுறை சாத்தியமா ?

தங்களுக்கான வெளிகளிலிருந்து அத்து மீறுதல் என்பதை நான் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்கிறேன். சுடுகாடு, கக்கூஸிலிருந்து தலித்கள் வெளியேறத்தான் வேண்டும். கருவறை நுழைவுப் போராட்டம் என்று முரசறைந்து கொண்டு புரட்சிகரமாய்த் தன்னைக் காண்பித்துக் கொண்ட இயக்கம் கூட, கக்கூஸையும் , சுடுகாட்டையும் விட்டு வெளியேறுங்கள் என்று போராட்டம் நடத்தவில்லை. மார்க்ஸ் சொல்லும் முற்போக்கு இயக்கங்கள் இது பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை என்பது, இந்த வேலைப் பகிர்வை மட்டும் பாதுகாப்பதில் தான் மும்முரமாய் இருக்கின்றன என்பதும் மார்க்ஸ் சொல்வதில்லை. இந்துத்துவ இயக்கங்களின் மீது வீசும் சவுக்கைக் கொஞ்சம் நிறுத்தி தன்னைச் சுற்றிலும் அவர் பார்த்திருக்கலாம். அப்போது நிஜமான எதிரிகள், நண்பர்கள் போன்று பாவனை செய்யும் எதிரிகள் யார் என்று தெரிந்திருக்கும்.தலித்கள் ஏற்கனவே ஒதுக்கிட்டின் கீழ் பயன் பெற்றால் , இது வரை பயன் பெறாத தலித்களைக் கருத்தில் கொண்டு ஒதுக்கீட்டு விதி சீர்செய்யப் படவேண்டும் என்பது கூட இங்கு இன்னும் பின்பற்றப் படாமல் இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட / மிகப் பிற்படுத்தப் பட்ட சாதியினர் என்று ஒதுக்கீடு கேட்கும் சாதியினர் தான் இன்று தலித்கள் மீது கொடூரத்தினை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் மார்க்ஸ் பார்ப்பனீயத்தை மட்டும் சாடி விட்டு பொதுவான பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை என தலித்களிடம் பொய்ப்பிரசாரம் செய்வார்கள். இன்று தலித்களின் எதிரிகள் பிராமணர்கள் அல்ல.

-இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 4 அத்தியாயம் 4 – இந்துத்துவம் : தலித்கள் பெண்கள்

Related Post